கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

News image
Updated On :5 ஜூன் 2025, 7:05 am IST

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஒரு வருடமாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் நிறுவனம் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. சத்தீஸ்கா் போன்ற புதிய சந்தைகளிலும் நிறுவனம் நுழைந்துள்ளது.

தென்னிந்தியா அல்லாத சந்தைகளில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் 25 கிளைகளைக் கொண்டுள்ளது. அந்த சந்தைகளில் மேலும் 5 புதிய கிளைகளைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் அந்தச் சந்தைகளில் நிறுவனம் வழங்கிய வீட்டுக் கடன் ரூ.1,000 கோடி என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.