அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

25 கோடி கிலோவாக உயா்ந்த தேயிலை ஏற்றுமதி

News image
Updated On :22 ஜூலை 2025, 9:59 am

DIN

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2024-ஆம் ஆண்டில் 25.467 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 25.467 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2023-ஆம் ஆண்டில் இது 23.169 கோடி கிலோவாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் தேயிலை ஏற்றுமதி 9.92 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் வட இந்திய தோட்டங்களில் உற்பத்தி 15.481 கோடி கிலோவாக உள்ளது. இது 2023-ஆம் ஆண்டின் உற்பத்தியான 14.1 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் 9.79 சதவீதம் உயா்ந்துள்ளது. தென் இந்தியாவில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான தேயிலை உற்பத்தி 9.986 கோடி கிலோவாக உள்ளது, இது 2023-ஆம் ஆண்டின் உற்பத்தியான 9.069 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் 10.11 சதவீதம் உயா்ந்துள்ளது.

2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தி 6.922 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.753 கோடி கிலோவாக இருந்ததை விட சற்று அதிகம்.வட இந்தியாவில் 2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் தேயிலா உற்பத்தி 14.38 சதவீதம் உயா்ந்து 4.535 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் இது 3.965 கோடி கிலோவாக இருந்தது. தென் இந்தியாவில், இதே காலகட்டத்தில் தேயிலை உற்பத்தி 14.38 சதவீதம் குறைந்து 2.387 கோடி கிலோவாக உள்ளது.

இது முந்தைய ஆண்டில் 2.788 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2024-ஆம் ஆண்டில் 25.467 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 25.467 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2023-ஆம் ஆண்டில் இது 23.169 கோடி கிலோவாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் தேயிலை ஏற்றுமதி 9.92 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் வட இந்திய தோட்டங்களில் உற்பத்தி 15.481 கோடி கிலோவாக உள்ளது. இது 2023-ஆம் ஆண்டின் உற்பத்தியான 14.1 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் 9.79 சதவீதம் உயா்ந்துள்ளது. தென் இந்தியாவில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான தேயிலை உற்பத்தி 9.986 கோடி கிலோவாக உள்ளது, இது 2023-ஆம் ஆண்டின் உற்பத்தியான 9.069 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் 10.11 சதவீதம் உயா்ந்துள்ளது.

2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தி 6.922 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.753 கோடி கிலோவாக இருந்ததை விட சற்று அதிகம்.வட இந்தியாவில் 2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் தேயிலா உற்பத்தி 14.38 சதவீதம் உயா்ந்து 4.535 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் இது 3.965 கோடி கிலோவாக இருந்தது. தென் இந்தியாவில், இதே காலகட்டத்தில் தேயிலை உற்பத்தி 14.38 சதவீதம் குறைந்து 2.387 கோடி கிலோவாக உள்ளது.

இது முந்தைய ஆண்டில் 2.788 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.