கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் புதிய வீடுகளின் அறிமுகம் 30,155-ஆக உள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 45,901-ஆக இருந்தது. அந்த வகையில் தற்போது முக்கிய 15 இரண்டாம் நிலை நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35 சதவீதம் சரிந்துள்ளது.
வீடு-மனை வா்த்தகா்கள் புதிய கட்டுமான திட்டங்களைக் குறைத்து, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதால் புதிய வீடுகளின் அறிமுகங்கள் குறைந்துள்ளன என்று கூறப்படுகிறது.
மதிப்பீட்டுக் காலாண்டில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை அகமதாபாதில் 17,108-லிருந்து 35 சதவீதம் குறைந்து 11,096-ஆக உள்ளது. காந்திநகரில் அது 4,825-லிருந்து 10 சதவீதம் சரிந்து 4,356-ஆகவும், சூரத்தில் 5,439-லிருந்து 39 சதவீதம் குறைந்து 3,309-ஆகவும் உள்ளது.
அதே போல், நடப்பாண்டின் முதல் காலாண்டில் புதிய வீடுகளின் அறிமுகம் நாசிக்கில் 2,509-லிருந்து 2 சதவீதம் சரிந்து 2,466-ஆகவும், வடோதராவில் 2,790-லிருந்து 23 சதவீதம் குறைந்து 2,149-ஆகவும் உள்ளது.
2024 ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஜெய்ப்பூரில் 2,997-ஆக இருந்த புதிய வீடுகளின் அறிமுகம் நடப்பாண்டின் அதே காலாண்டில் 5 சதவீதம் சரிந்து 1,348-ஆக உள்ளது. லக்னௌவில் அது 2,256-லிருந்து 1,026-ஆகவும், நாக்பூரில் 1,432-லிருந்து 28 சதவீதம் குறைந்து 1,036-ஆகவும் உள்ளது.
புவனேசுவரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2,804-ஆக இருந்த புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை நடப்பாண்டின் அதே காலாண்டில் 72 சதவீதம் சரிந்து 772-ஆகவும், கோவாவில் 587-லிருந்து 24 சதவீதம் குறைந்து 444-ஆகவும், போபாலில் 738-லிருந்து 51 சதவீதம் சரிந்து 365-ஆகவும் உள்ளது. அதே போல் மங்களூரில் அந்த எண்ணிக்கை 753-லிருந்து 64 சதவீதம் குறைந்து 269-ஆகவும், கொச்சியில் 437-லிருந்து 49 சதவீதம் சரிந்து 225-ஆகவும் உள்ளது.
திருவனந்தபுரத்தில் இந்த எண்ணிக்கை 751-லிருந்து 71 சதவீதம் குறைந்து 217-ஆகவும் உள்ளது. எனினும், கோயம்புத்தூரில் புதிய வீடுகளின் அறிமுகம் 475-லிருந்து 1,077 -ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!

ஹெச்.சி.எல். பங்குகள் 4 சதவீதத்துக்கும் அதிகமாக சரிவு!
24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் சரிந்த கச்சா எண்ணெய்!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



