உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, நியமிக்கப்படுவதன் மூலம், ஆண்டுதோறும் அவருக்கு ரூ.10 முதல் 20 கோடி வரை சம்பளம் வழங்கப்படும்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட்

Published On :

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, நியமிக்கப்படுவதன் மூலம், ஆண்டுதோறும் அவருக்கு ரூ.10 முதல் 20 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் அதே நேரத்தில் நிறுவனத்தின் லாபத்தில் கமிஷன் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும்.

ஆகாஷ், இஷா மற்றும் அனந்த் ஆகியோர் 2023ல் எண்ணெய் தொடங்கி தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகக் குழுமத்தின் இயக்குநர்களாக சேர்க்கப்பட்டாலும், ஆனந்த் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

நிர்வாகம் சாராத இயக்குநர்களாக இருந்த போது, முகேஷ் அம்பானியின் வாரிசுகளான மூவருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை என்ற நிலையில், 2023-24ஆம் நிதியாண்டில் ஒவ்வொருவருக்கும் ரூ.4 லட்சம் அமர்வு கட்டணமும் (sitting fee) மேலும் நிறுவனத்தின் லாபத்தில் கமிஷன் உள்பட தலா ரூ.97 லட்சம் வழங்கப்பட்டது.

அனந்தின் சம்பளம் மற்றும் சலுகைகள் ஆண்டுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை இருக்கும் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.