அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்வு! ரூ. 87.34

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 3 காசுகள் உயர்ந்து ரூ. 87.34 காசுகளாக நிறைவு பெற்றது.

News image
ரூபாய் மதிப்பு- PTI
Updated On :3 மார்ச் 2025, 2:16 pm

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (மார்ச் 3) 3 காசுகள் உயர்ந்து ரூ. 87.34 காசுகளாக நிறைவு பெற்றது.

கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 28) 19 காசுகள் சரிந்து ரூ. 87.37 காசுகளாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று அதிகபட்சமாக ரூ. 87.41 காசுகள் வரை சரிந்தது.

எனினும் பிற்பாதியில் சற்று நேர்மறையாக இருந்தது. அதிகபட்சமாக ரூ. 87.25 காசுகள் வரை மதிப்பு உயர்ந்திருந்தது.

எனினும் வணிக நேர முடிவில் முந்தைய நாளின் ரூபாய் மதிப்பில் இருந்து 3 காசுகள் சரிந்து ரூ. 87.34 காசுகளாக வணிகம் நிறைவு பெற்றது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இன்றைய பங்குச் சந்தை வணிகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதும், வெளிநாட்டு நிதி வெளியேற்றமும் நிலையற்று இருந்ததும் முதலீட்டாளர்களிடையே உற்சாகமான போக்கை இன்று ஏற்படுத்தியது. இதுவே ரூபாய் மதிப்பு சற்று உயர்வதற்கான காரணமாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.16 புள்ளிகள் சரிந்து 73,085.94 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.15 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.40 புள்ளிகள் சரிந்து 22,119.30 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.024 சதவீதம் சரிவாகும்.

மெட்டல், ரியாலிட்டி, நுகர்வோர் பொருள்கள் துறை, ஐடி துறை பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்த நிலையில், மீடியா, வங்கித் துறை, எண்ணெய் & எரிவாயு துறை பங்குகள் எதிர்மறையாக இருந்தன.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.