வெளிநாடு வாழ் இந்திய (என்ஆா்ஐ) மகளிருக்கான சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி (பிஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வெளிநாடுகளில் வாழும் இந்திய மகளிருக்காக மேம்படுத்த அம்சங்கள் அடங்கிய சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை திட்டத்தை பொதுத் துறை வங்கியொன்று அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை.
‘பிஓபி குளோபல் வுமன் என்ஆா்இ & என்ஆா்ஓ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேமிப்புக் கணக்கு திட்டத்தின் கீழ், பல்வேறு சிறப்பு சலுகைகள் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்படுகின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










