
மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் அந்நிய மூலதன வரத்து காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 36 காசுகள் உயர்ந்து ரூ.86-ஆக நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.26 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.93 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.30 ஐ தொட்ட நிலையில், முடிவில் 36 காசுகள் உயர்ந்து ரூ.86-ஆக முடிந்தது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.86.36 ஆக முடிவடைந்தது.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஆறாவது அமர்வாக அதிகரித்து, இது நாள் வரையில் 123 காசுகள் உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.