குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறு நாணய அளவிலான பேட்டரி அறிமுகம்: ஒருமுறை சார்ஜ் செய்தாலே 50 ஆண்டுகள் நீடிக்கும் திறன்!

இது சந்தைக்குப் புதுசு...

News image
சிறு நாணய அளவிலான பேட்டரி - படம் | https://www.indulgexpress.com/
Updated On :4 மே 2025, 7:57 am

DIN

ஒருமுறை சார்ஜ் செய்தாலே சுமார் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் திறன் வாய்ந்த புது வகையான பேட்டரியை மின்னணு பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த பீட்டாவோல்ட் நிறுவனம் அணுசக்தியால் இயங்கும் திறனுள்ள இந்த பேட்டரியை வடிவமைத்துள்ளது.

பி.வி.100 என்று அழைக்கப்படும் இந்த பேட்டரி, சரியாகச் சொல்ல வேண்டுமானால் 15 * 15 * 5 மி.மீ. அளவில் கைக்கு அடக்கமாக இருப்பது முக்கியமானதொரு சிறப்பம்சமாகும்.

நிக்கல்-63 உடன் டைமண்ட்டால்(வைரத்தால்) ஆன செமிகண்டக்டர் பொருளால் இந்த பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது. கதிரியக்க திறனுள்ள நிக்கல்-63 ஐசோடோப்பிலிருந்து அணு ஆற்றலை இந்த பேட்டரி கிரகித்துக் கொள்கிறது.

இதனால் ஒரேயொருமுறை சார்ஜ் செய்தாலே அதன்பின் 50 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து உழைக்கும் திறன் கொண்டுள்ளது. மீண்டும் மறுசுழற்சி செய்தும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மைனஸ் 60 முதல் அதிகபட்சமாக 120 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் திறன் வாய்ந்ததாகவும் இது உள்ளது. ஆகவே எளிதில் தீப்பிடிக்காது. கடுங்குளிர் சீதோஷ்ணத்திலும் பயன்படுத்தலாம்.

ஆனால் இதிலுள்ள தற்போதைய சிக்கலானது, இதிலிருந்து மிகக் குறைந்த ஆற்றலே வெளியேற்ற முடியுமென்பதுதான். இதிலிருந்து 100 மைக்ரோவாட்ஸ் பவர் மட்டுமே 3 வோல்ட் மின்னழுத்த திறனில் வெளியேற்றப்படுகிறது.

இதனால் இதனை ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட அதிக ஆற்றல் தேவைப்படும் மின்னணு சாதனங்களில் பயன்படுத்த இயலாத நிலை இப்போதைக்கு உள்ளது. இதற்கும் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.