இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 686 பில்லியன் டாலராக சரிவு!

அந்நிய செலாவணி கையிருப்பு, மே 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 206 கோடி டாலர் குறைந்து 68,606 கோடி டாலராக உள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 686 பில்லியன் டாலராக சரிவு!
Updated on
1 min read

மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, மே 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 206 கோடி டாலர் குறைந்து 68,606 கோடி டாலராக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

முந்தைய வாரத்தில் இது 1.983 பில்லியன் டாலர் அதிகரித்து 688.129 பில்லியன் டாலராக இருந்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 2024 இறுதியில் இதுவரை இல்லாத அளவாக 704.885 பில்லியன் டாலரை எட்டியது.

மே 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது 514 மில்லியன் டாலர் அதிகரித்து 581.177 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதே வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 254 கோடி டாலா் சரிந்து 8,182 கோடி டாலராக உள்ளது.

இதையும் படிக்க: ஏடிஎம் குறித்த வதந்திக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மறுப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com