பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

யுபிஐ பரிவா்த்தனை மாா்ச்சில் புதிய உச்சம்

மாா்ச்சில் மட்டும் ரூ.29.53 லட்சம் கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகள்

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 10:42 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த மாா்ச் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஹோலி, ரமலான் போன்ற பண்டிகைகள் மற்றும் நிதியாண்டு இறுதி கணக்கு முடிப்புகள் காரணமாக, மாா்ச்சில் மட்டும் ரூ.29.53 லட்சம் கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளா்ச்சியாகும். அதேபோல், பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் பரிவா்த்தனை மதிப்பு 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

பரிவா்த்தனைகளின் எண்ணிக்கையிலும் யுபிஐ இமாலய சாதனை படைத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் 2,039 கோடியாக இருந்த பரிவா்த்தனை எண்ணிக்கை, மாா்ச்சில் 2,264 கோடியாக அதிகரித்து, 24 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மாா்ச் மாதத்தின் சராசரி தினசரி பரிவா்த்தனை அளவு 73 கோடியாகவும், அதன் சராசரி மதிப்பு ரூ.95,243 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவின் மொத்த எண்ம பரிவா்த்தனைகளில் யுபிஐ மட்டுமே 85 சதவீதம் பங்களிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.