/

சாம்சங் கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! இந்தியாவில் விலை எவ்வளவு?

சாம்சங் கேலக்ஸி இசட் வரிசை ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள், விலை நிர்ணயம் குறித்து...

News image

சாம்சங் கேலக்ஸி இசட் - படம் / நன்றி - சாம்சங்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 5:02 pm IST

சாம்சங் கேலக்ஸி இசட் வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. அவற்றின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து அறிந்துகொள்ளலாம்.

சாக்சங் நிறுவனத்தில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8, இசட் ஃபோல்ட் அல்ட்ரா ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான நிலையில், இசட் வரிசை ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு அமெரிக்காவில் மட்டும் 30 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது.

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 8 அங்குல திரை கொண்டது. ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5 ஆம் தலைமுறை புராசஸர் உடையது. 200MP முதன்மை கேமராவும் 50MP அல்ட்ரா வைட் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி 45W சார்ஜிங் திறன் உடையது.

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 ஸ்மார்ட்போன் தொடுதிரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3000 nits திறன் உடையது. ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5 ஆம் தலைமுறை புராசஸர் உடையது. பின்புறம் 50MP திறனுடன் இரட்டை கேமராக்கள் உடையது. 4800mAh பேட்டரி திறன் கொண்டது.

கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 ஸ்மார்ட்போன் மடிக்கக் கூடிய திரை உடையது. 50MP முதன்மை கேமரா கொண்டது.

விலை நிலவரம்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 அல்ட்ரா - 12GB + 256GB நினைவகம் - ரூ. 1,99,999

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 அல்ட்ரா - 12GB + 512GB நினைவகம் - ரூ. 2,19,999

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 அல்ட்ரா - 16GB + 1TB நினைவகம் - ரூ. 2,59,999

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 - 12GB + 256GB - ரூ. 1,79,999

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 - 12GB + 512GB - ரூ. 1,99,999

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 - 16GB + 1TB - ரூ. 2,39,999

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 - 12GB + 256GB - ரூ. 1,24,999

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 - 12GB + 512GB - ரூ. 1,44,999

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.