மும்பை: மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், கடந்த ஆண்டு ஜூன் வரையான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அதன் வரிக்குப் பிந்தைய லாபம் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்து ரூ. 29 கோடியாக உயர்ந்துள்ளதாக இன்று அறிவித்தது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 6.44 கோடி லாபத்தைப் பதிவு செய்தது.
செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் 23 சதவீதம் அதிகரித்து, ரூ. 1,345.82 கோடியிலிருந்து ரூ. 1,654.89 கோடியாக உயர்ந்துள்ளது.
ஒருங்கிணைந்த அடிப்படையில், கடந்த ஆண்டு ரூ. 9.44 கோடி நஷ்டம் ஏற்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் ரூ. 27.83 கோடி லாபத்தைப் பதிவு செய்தது.
கடந்த ஆண்டு ஜூன் வரையான காலாண்டில் ரூ. 1,624.59 கோடியாக இருந்த செயல்பாட்டு வருவாய், இந்தக் காலாண்டில் 23 சதவீதம் அதிகரித்து ரூ. 2,002.88 கோடியாக உயர்ந்துள்ளது.
Summary
Mahindra Logistics said its standalone profit after tax in June quarter rose nearly fivefold.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










