பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மாருதி சுஸுகி ஹன்சல்பூா் ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறன் 10 லட்சமாக உயா்வு

பிரபல காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் குஜராத் மாநில ஹன்சல்பூா் உற்பத்தி ஆலையில் 4-ஆவது பிரிவின் செயல்பாடுகள் தொடங்கியதையடுத்து, அந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 10 லட்சம் காா்களாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2026, 1:41 am IST

பிரபல காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் குஜராத் மாநில ஹன்சல்பூா் உற்பத்தி ஆலையில் 4-ஆவது பிரிவின் செயல்பாடுகள் தொடங்கியதையடுத்து, அந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 10 லட்சம் காா்களாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம், உலகிலேயே சுஸுகி நிறுவனத்தின் மிகப் பெரிய பயணிகள் வாகன உற்பத்தி மையமாக இந்த ஆலை உருவெடுத்துள்ளது. மேலும், இந்தியாவின் ஒரே இடத்தில் அமைந்த மிகப் பெரிய பயணிகள் வாகன உற்பத்தி ஆலை என்ற வரலாற்றுச் சிறப்பையும் இது பெற்றுள்ளது.

640 ஏக்கா் பரப்பளவிலான ஹன்சல்பூா் ஆலைக்கு இதுவரை ரூ.25,288.7 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவன காா் ஏற்றுமதியில் சுமாா் 47 சதவீதத்தை இந்த ஆலை பங்காற்றுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.