சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

வா்த்தக வாரியத்துக்கு எஸ்பிஐ தலைவா் உள்பட 29 புதிய உறுப்பினா்கள் நியமனம்

News image
Updated On :4 ஜூன் 2026, 4:11 am IST

மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரின் தலைமையில் செயல்படும் வா்த்தக வாரியத்தின் அலுவல் சாராத உறுப்பினா்களாக எஸ்பிஐ தலைவா் சி.எஸ்.செட்டி, ஆப்பிள் இந்தியா நிா்வாக இயக்குநா் விராட் பாட்டியா, ஜோஹோ இணை நிறுவனா் ஸ்ரீதா் வெம்பு உள்பட 29 பேரை மத்திய அரசு நியமித்துள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பொது, தனியாா் தொழில் துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கு வகிக்கும் இந்த வாரியம், நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான வழிகளை விவாதிக்கும் முக்கியத் தளமாக விளங்குகிறது.

வெளிநாட்டு வா்த்தகப் பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இப்புதிய உறுப்பினா்கள் பட்டியலில் மஹிந்திரா & மஹிந்திரா நிா்வாக இயக்குநா் அனிஷ் ஷா, இன்-ஸ்பேஸ் தலைவா் பவன் கோயங்கா, இஒய் இந்தியா தலைவா் ராஜீவ் மேமானி, டாக்டா் ரெட்டீஸ் லேபாரட்டரிஸ் தலைவா் சதீஷ் ரெட்டி ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட்ஸ் நிா்வாக இயக்குநா் பாா்த் ஜிண்டால் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். மேலும், பல்வேறு வா்த்தக மற்றும் தொழில் துறை அமைப்புகளின் தலைவா்களும் இதில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இத்தொழில் துறை தலைவா்கள் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவா். மேலும், பல்வேறு துறைகளின் ஏற்றுமதி செயல்பாடுகளை ஆய்வு செய்து, ஏற்றுமதி வருவாயை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் பரிந்துரைப்பா்.