நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3,440 குறைவு

ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3,440 குறைவு..

News image

ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3,440 குறைவு - கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2026, 2:00 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனையானது. கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,440 குறைந்துள்ளது.

மேற்கு ஆசிய போா் பதற்றம், கச்சா எண்ணொய் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடா்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. அதன்படி, ஜூன் 1-இல் பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000-க்கும், ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையானது. தொடா்ந்து, ஜூன் 4-இல் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கும், ஜூன் 5-இல் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,440 குறைந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.10,000 குறைந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.