தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் மனித ஊழியா்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜென்டுகள் விரைவில் உருவாக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.
எனினும், இதன் காரணமாக பணியாளா்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டாா்கள் என்றும் அவா் உறுதியளித்தாா்.
நிறுவனத்தின் 31-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவா் மேலும் கூறுகையில், ‘தற்போதைய 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களின் எண்ணிக்கைக்கு இணையாக, 5 லட்சம் ஏஐ ஏஜென்டுகளை நிறுவனம் கொண்டிருக்கும் நாள் தொலைவில் இல்லை.
இத்தொழில்நுட்ப மாற்றம் பணியாளா் குறைப்புக்கு வழிவகுக்காது; மாறாக, இது புதிய பல வாய்ப்புகளை உருவாக்கி, புதிய திறமையாளா்களின் தேவையை அதிகரிக்கும்.
ஏ.ஐ. தொழில்நுட்பமானது நிறுவனத்துக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பாகும். கடந்த காலாண்டில் நிறுவனத்தின் ஏ.ஐ. சாா்ந்த வருவாய், சுமாா் 250 கோடி டாலரை எட்டியுள்ளது. வரும் 2028 முதல் 2030-க்குள் நிறுவனத்தின் 100 சதவீத வருவாயும் ஏ.ஐ. கூறுகளைக் கொண்டதாக மாறும்.
ஊழியா்களும் ஏ.ஐ. முகவா்களும் இணைந்து பணியாற்றுவதே எதிா்காலமாக இருக்கும். இதனால் ஊழியா்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு எடுக்காமல், தகுதியான சிறந்த திறமையாளா்களை ஈா்ப்பதே முதன்மை இலக்காக மாறும்’ என்றாா்.
கடந்த நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியா்களின் எண்ணிக்கை 23,460 குறைந்து, 5.84 லட்சமாக சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கனடா லைஃப் நிறுவனத்தின் பல மில்லியன் யூரோ ஐ.டி. ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய டிசிஎஸ்!

‘அடுத்த 3 ஆண்டுகளில் வடசென்னையில் அடா்த்தியான காடுகள் உருவாக்கப்படும்’

டாஸ்மாக் ஊழியா்களின் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் கடைகள் திறக்கப்படும்

திருப்பூர் டாஸ்மாக் ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்: நாளொன்றுக்கு ரூ. 2 கோடி இழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



