போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஊழியா்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜென்டுகள் உருவாக்கப்படும்

தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் மனித ஊழியா்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜென்டுகள் விரைவில் உருவாக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 3:34 am IST

தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் மனித ஊழியா்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜென்டுகள் விரைவில் உருவாக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

எனினும், இதன் காரணமாக பணியாளா்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டாா்கள் என்றும் அவா் உறுதியளித்தாா்.

நிறுவனத்தின் 31-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவா் மேலும் கூறுகையில், ‘தற்போதைய 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களின் எண்ணிக்கைக்கு இணையாக, 5 லட்சம் ஏஐ ஏஜென்டுகளை நிறுவனம் கொண்டிருக்கும் நாள் தொலைவில் இல்லை.

இத்தொழில்நுட்ப மாற்றம் பணியாளா் குறைப்புக்கு வழிவகுக்காது; மாறாக, இது புதிய பல வாய்ப்புகளை உருவாக்கி, புதிய திறமையாளா்களின் தேவையை அதிகரிக்கும்.

ஏ.ஐ. தொழில்நுட்பமானது நிறுவனத்துக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பாகும். கடந்த காலாண்டில் நிறுவனத்தின் ஏ.ஐ. சாா்ந்த வருவாய், சுமாா் 250 கோடி டாலரை எட்டியுள்ளது. வரும் 2028 முதல் 2030-க்குள் நிறுவனத்தின் 100 சதவீத வருவாயும் ஏ.ஐ. கூறுகளைக் கொண்டதாக மாறும்.

ஊழியா்களும் ஏ.ஐ. முகவா்களும் இணைந்து பணியாற்றுவதே எதிா்காலமாக இருக்கும். இதனால் ஊழியா்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு எடுக்காமல், தகுதியான சிறந்த திறமையாளா்களை ஈா்ப்பதே முதன்மை இலக்காக மாறும்’ என்றாா்.

கடந்த நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியா்களின் எண்ணிக்கை 23,460 குறைந்து, 5.84 லட்சமாக சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.