காத்மாண்டு : நேபாளத்தில் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்டிருப்பதாக இந்தியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் மீது தர ரீதியான குற்றச்சாட்டு நேபாளத்தால் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய மாம்பழங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் எதிரொலியாக, இந்திய உள்ளூர் சந்தைகளில் மாம்பழ வரத்து அதிகரித்திருப்பதாக வணிகர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், நேபாள அரசின் இந்த நடவடிக்கையானது அந்நாட்டில் விவசாயிகளிடையே மாம்பழ உற்பத்தியை ஊக்குவிக்கும் யுக்தியாக பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனினும், நேபாளத்துக்கான மாம்பழ இறக்குமதியை இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கும் என்பதால், அந்நாட்டில் மாம்பழச் சாறு தயாரிப்பு ஆலைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Summary
Nepal has restricted the import of mangoes from India due to the fruit allegedly containing excessive pesticides and a lack of quarantine facilities in the border areas, officials here said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்
திருச்சியில் முதல்வா் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கட்டுப்பாடுகள்!

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!
இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதித்த ஜப்பான்! ஏன்?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




