நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

கயத்தாறில் 100 மெகாவாட் சூரியமின் திட்டம் தொடக்கம்

தமிழகத்தின் கயத்தாறில் 100 மெகாவாட் சூரியமின் திட்டத்தை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது பற்றி....

Published On :2 செப்டம்பர் 2026, 3:19 am IST

டாடா குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான டாடா பவா் ரினியூவபிள்ஸ், தமிழகத்தின் கயத்தாறில் 100 மெகாவாட் சூரியமின் திட்டத்தை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

சுமாா் 2.61 லட்சம் அதிநவீன சூரியமின் தகடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த 100 மெகாவாட் மின்திட்டம் மூலம், ஆண்டுதோறும் 24.06 கோடி யூனிட் தூய்மை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரம், கயத்தாறில் உள்ள 400 கிலோவாட் துணை மின்நிலையம் வழியாக டாடா குழுமத்தைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களின் சொந்தப் பயன்பாட்டுக்காக நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

இப்புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதன்மூலம், நிறுவனத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 7 ஜிகாவாட் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இந்த 7 ஜிகாவாட் உற்பத்தியில், 5.7 ஜிகாவாட் மின்சாரம் சூரியசக்தி மூலமாகவும், மீதமுள்ள 1.3 ஜிகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலமாகவும் கிடைக்கிறது.

இதுதவிர கூடுதலாக 5.3 ஜிகாவாட் திறன் கொண்ட திட்டங்களை பல்வேறு கட்டங்களில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதில் 2.2 ஜிகாவாட் சூரியமின் மற்றும் 3.1 ஜிகாவாட் காற்றாலைத் திட்டங்கள் அடங்கும்.

இப்புதிய திட்டங்கள் அனைத்தும் அடுத்த 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளில் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரவுள்ளன. வரும் 2030-க்குள் 500 ஜிகாவாட் அளவுக்குத் தூய்மையான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் மாபெரும் இலக்கை அடைவதற்கு, டாடா நிறுவனத்தின் இத்தகைய தொடா் நடவடிக்கைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.