
2 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.
விதிமுறைகளை மீறியதற்காக 'கைலாஷ் ஃபார்முலேஷன்' மற்றும் 'சானிக்யூர் வாட்டர் ப்ராஜெக்ட்' ஆகிய நிறுவனங்களின் உரிமங்களை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. இடைநீக்கம் செய்தது.

FSSAI
புதுதில்லி: சுகாதாரம் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 'கைலாஷ் ஃபார்முலேஷன்' மற்றும் 'சானிக்யூர் வாட்டர் ப்ராஜெக்ட்' ஆகிய நிறுவனங்களின் உரிமங்களை உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. இடைநீக்கம் செய்தது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, சுகாதாரம், தூய்மை மற்றும் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டதால், இரு நிறுவனங்களின் உரிமங்களும் இடைநீக்கம் செய்ததாக ஆணையம் தெரிவித்தது.
'கைலாஷ் ஃபார்முலேஷன்' நிறுவனத்தைப் பொறுத்தவரை, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினாலும், நிறுவனத்தின் சுத்தம், சுகாதாரம் மற்றும் அதனை சார்ந்த வசதிகள் திருப்தியற்ற நிலையில் இருந்ததாக எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தெரிவித்தது. அதே வேளையில், முறையான கை கழுவுதல், உடை, சுகாதார மாற்றும் பிற வசதிகள் இல்லாததும், அத்துடன் உணவு கையாளுபவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை, தடுப்பூசி மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பதிவுகள் பராமரிக்காததும் குறைபாடுகளாக அமைந்ததாக தெரிவித்தது.
பல்வேறு விதிமீறல்கள் காரணமாக, பொது சுகாதார நலன் கருதி 'கைலாஷ் ஃபார்முலேஷன்' நிறுவனத்தின் அனைத்து வணிகங்களுக்கான உரிமமும் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு நிறுவனமான, 'சானிக்யூர் வாட்டர் ப்ராஜெக்ட்' பொறுத்தவரை, மோசமான சுகாதாரம், தூய்மை நிலை மற்றும் பூச்சிகள் உள்ளே வராமல் தடுப்பதற்கான போதிய ஏற்பாடுகள் இல்லாதது கண்டறியப்பட்டது.
Summary
FSSAI has suspended licences of West Bengal-based companies, Kailash Formulation and Sanecure Water Project, for violation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






