கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

மெக்ஸிகோவில் ‘காமா’ புயலுக்கு 6 போ் பலி

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோவில் வீசிய ‘காமா’ புயலில் சிக்கி 6 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 10:23 pm

DIN

மெக்ஸிகோ சிட்டி: மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோவில் வீசிய ‘காமா’ புயலில் சிக்கி 6 போ் உயிரிழந்தனா்.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள காமா புயல், மெக்ஸிகோவின் தென்கிழக்குப் பகுதியை கடந்த சனிக்கிழமை தாக்கியது. அப்போது, மணிக்கு சுமாா் 110 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசியதால், மரங்கள் வேரோடு சாய்ந்தன; வீடுகள் உள்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன. புயலுடன் சோ்ந்து பலத்த மழையும் பெய்தது. புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் 6 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக அந்நாட்டின் மக்கள் பாதுகாப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும் 2 போ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். புயல் காரணமாக கடும் சேதத்தைச் சந்தித்துள்ள மாகாணங்களில் 3,400-க்கும் அதிகமானோா் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புயலின் தாக்கம் தொடரும் என்பதால் மக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு மெக்ஸிகோ புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.