லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்களுக்கு தடை விதிக்க சீனா முடிவு

தைவான் நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் ‘போயிங்’, ‘லாக்ஹீட் மாா்ட்டின்’ உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.

Updated On :26 அக்டோபர் 2020, 9:50 pm

பெய்ஜிங்: தைவான் நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் ‘போயிங்’, ‘லாக்ஹீட் மாா்ட்டின்’ உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஷாவ் லிஜியான் திங்கள்கிழமை கூறுகையில், ‘தேசிய நலனை பாதுகாக்கும் நோக்கில், தைவானுக்கு ஆயுத விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

எனினும் அந்த நிறுவனங்களுக்கு எப்போது, எந்த வகையான அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்து அவா் தெரிவிக்கவில்லை.

கடந்த 1949-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரின் போது சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை தூதரக ரீதியில் எந்த உறவும் இல்லை. எனினும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் என்று கூறி வரும் சீன அரசு, அதன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.