ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

45. பண்டைய ஆவணங்கள்

ஊர்ப் பயன்பாடு என்று வந்துவிட்டால், ஆவணங்களைப் பாதுகாப்பது நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்றியமையாதது ஆகிறது.

Published On :6 ஆகஸ்ட் 2025, 6:00 pm IST

நம்மில் பண்டைய ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று எத்தனை பேருக்குத் தோன்றும்? அவற்றை பழைய குப்பைகளென்றே எண்ணுவோம், அல்லது தேவையானவற்றை மட்டும் எடுத்து வைப்போம். ஆனால், ஊர்ப் பயன்பாடு என்று வந்துவிட்டால், ஆவணங்களைப் பாதுகாப்பது நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்றியமையாதது ஆகிறது. பூர்வராஜாக்கள் வைத்தபடி என்றும் முந்தைய அரசரின் பெயரைக் குறித்தும் வைத்த கொடைகள் பல பிற்கால கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெற்றிருக்கின்றன. அத்தகைய கொடையை ஆவணத்தைச் சரிபார்த்து மீண்டும் நிலை நிறுத்திய செய்தியும் வரலாற்றின் வண்ணத்தில் இருக்கிறது.

கோவை அவிநாசி அருகிலுள்ள ஆலத்தூரில் உள்ள சமணர் கோயிலில் ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது. இது மூன்றாம் வீரவல்லாளனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு ஆலத்தூர் முழுமையையும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கோயில்களுக்கு அளிக்கப்பட்டமையையும் அதற்கான உரிமை கோரப்பட்டமையையும் காட்டுகிறது. அதற்கு முன்பிருந்த திரிபுவன சக்கரவர்த்தியான மன்னன்  அவிநாசி ஆளுடையார் கோயிலுக்குக் கொடுத்ததாகவும் சேரமான் சக்கரவர்த்தி அணியாதழகியார் என்னும் சமணர் கோயிலுக்குக் கொடுத்ததாகவும் இரண்டு கோயில் தானத்தாரும் நாட்டாரிடம் முறையிட்டனர். அப்போது அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இரண்டுமே பழமையான ஆவணங்களாக இருப்பதைப் பார்த்த நாட்டார், இரு கோயில்களுக்குமே உரிமை இருப்பதைப் பார்த்து இரண்டு கோயிலுக்கும் ஊரைப் பொதுவாக்கினர். தெற்கில் உள்ள தெருவையும் கீழைக்குடியையும் சமணர் கோயிலுக்கு வழங்கினர். இதற்கான ஆவணமாக இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டது.

நாட்டார் முன்பு முறைப்பட்டு இரண்டு சாதனமும் காட்டுகையில் இரண்டு சாதனமும் பூர்வசாதனம் ஆனபடியாலே இரண்டு கோயிலுக்கும் பொதுவாக்கி இந்த ஊர் தெற்கில் தெருவும் இறைஇறுப்பு கீழைக்குடி சூழும் அமண தேவர்க்கு இம்மருவாதி பிறவும் திருமலையில் வெட்டுவித்து..

என்பது கல்வெட்டு வரிகள்.

ஆக, அரசர்களின் ஆட்சி மாற்றத்தில் ஒரே ஊர் இரண்டு கோயில்களுக்கு விடப்பட்டிருந்தாலும், அதன் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டமையும் பின்னாளில் வீரவல்லாளனின் காலத்தில் நாட்டார் தகுந்த முடிவெடுத்து செயல்பட்ட தன்மையும் இன்றும் நமக்கு ஆவணத்தின் முக்கியத்துவத்தையும் இக்கட்டான சூழ்நிலையில் செய்ய வேண்டிய முறையையும் தெரிவிக்கின்றன.

இன்று அந்தக் கோயிலே பாழ்பட்டு நிற்பதுதான் வேதனையான செய்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.