தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நா.நாச்சாள்

தேவயானவை:
காட்டுயானம் அவல் - 1 கிண்ணம்
தேங்காய்ப்பால் - 1 1/2 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி, உலர் திராட்சை - தேவைக்கேற்ப
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
பசு நெய் - தலா சிறிதளவு

செய்முறை: காட்டுயானம் அவலை நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்த காட்டுயானம் அவலை 2-3 முறை தண்ணீர்விட்டு அரைத்த தேங்காய்ப்பாலில் வேக விடவும்.  வெல்லத்தை ஊறவைத்து மண் இல்லாது வடிகட்டி வைக்கவும்.

அவல் வெந்ததும், உடனடியாகக் குளிர்ந்த நீர் அரை கிண்ணம் சேர்க்கவும். இப்படிச் செய்வதால் அவல் ஒட்டாமல் குழையாமல் இருக்கும்.
மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்போது, வெல்லம் சேர்த்துக் கரையவிடவும். சேர்ந்து வரும்போது கெட்டி தேங்காய்ப்பால், பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரி, உலர்ந்த திராட்சை பொரித்துச் சேர்க்கவும். காட்டுயானம் பாயசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.