

தேவையானவை:
முருங்கைக் கீரை - 1 கிண்ணம்
துவரம்பருப்பு - 50 கி
கடலைப் பருப்பு - 50 கி
வெங்காயம் - 50 கி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை, மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையானவை
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றை தண்ணீரில் ஊற வைத்து உப்பு, சோம்பு இவற்றைப் போட்டு இட்லி மாவுப் பதத்தில் அரைத்து எடுத்து பட்டை, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து இட்லித் தட்டில் வைத்து பத்து நிமிடம் வெந்தெடுத்து ஆறியதும் உதிர்க்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும், கடுகு தாளித்து வெங்காயம், கீரை இவற்றை வதக்கி உதிர்த்த கோலாவையும் கொட்டி மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.