

தேவையானவை:
முற்றின புளிப்பு மாங்காய் - 1
வெல்லம் - 300 கி
ஏலக்காய் - 6
வென்னிலா எசன்ஸ் - சில துளிகள்
மைதா அல்லது கோதுமை மாவு - 200 கி
பொட்டுக் கடலை பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை: மாங்காய் துருவலையும், பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கி கனமான வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து சுருளக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் எசன்ஸ் விட்டு இறக்கி ஆற வைத்து பொட்டுக் கடலைப் பொடித் தூவி சிறுசிறு உருண்டைகளாகக் செய்து கொள்ள வேண்டும். மாவை எண்ணெய்யும் தண்ணீரும் விட்டு பூரி மாவு போன்று பிசைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிசைந்த மாவை பூரி போன்று திரட்டி நடுவில் மாங்காய் பூரணம் வைத்து மூடி போளியாக தட்ட வேண்டும். தோசைக் கல் அடுப்பில் காய்ந்ததும் போளி தட்டியதை நெய் விட்டு சுட்டெடுக்க வேண்டும்.
•••
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.