வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 26 – அதிசயப் பத்து - 5

வினையினால் உண்டானது இந்த உடல், இதில் பொருந்துகிற மெய்ப்பொருள் எப்படிப்பட்டது என்றால்,

News image
Updated On :14 டிசம்பர் 2015, 10:37 am

என்.சொக்கன்

சிவபெருமானின் திருக்கோலத்தையும் அவர் தனக்கு அருள்செய்த தன்மையையும் எண்ணி வியப்படைந்து மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை, பத்து பாடல்கள்.

163

பாடலின்பம்

உற்ற ஆக்கையின் உறுபொருள்

நறுமலர் எழுதரு நாற்றம்போல்

பற்றல்ஆவதுஓர் நிலைஇலாப்

பரம்பொருள் அப்பொருள் பாராதே

பெற்றவா பெற்ற பயன்அது

நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே

அத்தன் ஆண்டு தன் அடியரில்

கூட்டிய அதிசயம் கண்டோமே.

*

இருள்திணிந்துஎழுந்திட்டதுஓர்

வல்வினைச் சிறுகுடில் இது,இத்தைப்

பொருள்எனக்களித்து அருநரகத்துஇடை

விழப்புகுகின்றேனைத்

தெருளும் மும்மதில் நொடிவரை

இடிதரச் சினப்பதத்தொடு செந்தீ

அருளும் மெய்ந்நெறி, பொய்ந்நெறி

நீக்கிய அதிசயம் கண்டோமே.

பொருளின்பம்

வினையினால் உண்டானது இந்த உடல், இதில் பொருந்துகிற மெய்ப்பொருள் எப்படிப்பட்டது என்றால், நல்ல மலரிலே மணம் சேர்ந்திருப்பதைப்போல நாம் பற்றிக்கொள்ளக்கூடியது, அந்தப் பரம்பொருளின் தன்மை இத்தகையது என்று யாராலும் சொல்ல இயலாது,

இந்த விஷயத்தை உணராத சிலர், உலகவாழ்க்கையில் கிடைத்த இன்பங்கள்தான் பெரியவை என்று எண்ணி அவற்றை அனுபவித்துக்கொண்டிருப்பார்கள், அந்தப் பித்தர்களின் சொல்லை நான் நம்பிவிடாதபடி என் தந்தை, சிவபெருமான் என்னை ஆட்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!

*

இந்த உடல், அறியாமை என்கிற இருளைத் திணித்துத் தீயவினைகளால் உருவாக்கிய சிறியகுடில். இதை ஒரு பெரிய விஷயம் என்று நினைத்து, மகிழ்ந்து, கொடுமையான நரகத்தில் விழச் சென்றுகொண்டிருக்கிறேன்,

கோபத்தோடு சிவந்த நெருப்பைத் தந்து, எல்லாரும் தெளிவாகக் காண்கின்ற முப்புரங்களையும் நொடிப்பொழுதில் அழித்தவன், உண்மையான நெறியாகத் திகழ்கிறவன், சிவபெருமான் என்னிடமிருந்த பொய்ந்நெறிகளை நீக்கினான், இது அதிசயமல்லவா!

சொல்லின்பம்

ஆக்கை: உடல்

நாற்றம்: மணம்

பெற்றவா: பெற்றவற்றை

அத்தன்: தந்தை

இத்தை: இதை

தெருளும்: தெளிவாகத் தெரியும்

மெய்ந்நெறி: உண்மைநெறி/ சிவபெருமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.