அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஹரி கிருஷ்ணன்

அறிவு கலங்கி, மனம் ஒன்றாமல் அலைந்து திரிவதை ஒழித்தருளவேண்டும் என்றும்; ‘எங்கேயிருந்து உன்னை அழைத்தாலும் அங்கே நீ என் முன்னே தோன்றியருள வேண்டும்’ என்றும் கோருகின்ற இந்தப் பாடல் திருச்செங்கோட்டுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற் சீர், மூன்றாம் சீர், ஐந்தாம் சீர் ஆகியனவற்றில் இரண்டாவது எழுத்து நெடிலாக அமைந்த மூன்றெழுத்துகளும் கணக்கில் சேராத ஒரு மெல்லொற்றும்; இரண்டாம் சீர், நான்காம் சீர், ஆறாம் சீர் ஆகியனவற்றில் ஒரு மெல்லொற்றோடு கூடிய இரண்டு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தந்தான தந்த தந்தான தந்த  
      தந்தான தந்த தனதான

அன்பாக வந்து உன்றாள் பணிந்து
         ஐம்பூத மொன்ற நினையாமல்

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
         ளம்போரு கங்கள் முலைதானும்

கொந்தேமி குந்து வண்டாடி நின்று
         கொண்டாடு கின்ற குழலாரைக்

கொண்டேநி னைந்து மன்பேது மண்டி
         குன்றாம லைந்து அலைவேனோ

மன்றாடி தந்த மைந்தாமி குந்த
         வம்பார்க டம்பை அணிவோனே

வந்தேப ணிந்து நின்றார்ப வங்கள்
         வம்பே தொலைந்த வடிவேலா

சென்றேயி டங்கள் கந்தாஎ னும்பொ
         செஞ்சேவல் கொண்டு வரவேணும்

செஞ்சாலி கஞ்ச மொன்றாய்வ ளர்ந்த
         செங்கோட மர்ந்த பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.