சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் இந்திய தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கடந்த சில வாரங்களாகவே வாட்ஸப் மற்றும் முகநூல் வாயிலாக பிராங்பேர்ட்டில் நடக்கவிருந்த யோகா நிகழ்ச்சி பற்றிய அழைப்பிதழ் பலராலும் பரிமாறப்பட்டுகொண்டிருந்தது. அதுவே நிறைய பேருக்கு இந்நிகழ்ச்சி பற்றி தெரிய உதவியாக இருந்தது. டெக்னாலஜி முன்னேற்றத்தில் இதுபோன்ற சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கிறது.
நேற்று மாலை 5 மணிக்கு பிராங்பேர்ட்டில் உள்ள 'வால்தெர்-பான்-க்ரோன் பெர்க் பிளாட்ஸ்' என்ற இடத்தில நிகழ்ச்சி ஆரம்பமானது. உடலுக்கு இதமாக சூரியன் 30 டிகிரி வெப்பத்தில் பிரகாசிக்க, அருகிலேயே குளிர்ந்த நீரூற்று உள்ளதைக் குதூகலிக்கச்செய்ய, சூழ்நிலைகள் அற்புதமாக அமைந்திருந்தது.
நிகழ்ச்சித் தொடக்கத்தில், தேவதைகள் போல வெள்ளை உடை மற்றும் இறக்கைகளுடன் ஆண், பெண்கள் மேடையில் நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க, கொள்ளை அழகு!
பிராங்பேர்ட்டின் இந்தியத் தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சமஸ்கிருத பாடல் ஒலிக்க நிகழ்ச்சி ஆரம்பமானது.
முன்னதாக வந்து டீ சர்ட் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவித்தபடியால் பலர் சரியான நேரத்திற்கு முன்னதாக வந்து பெற்றுக்கொண்டனர். ஒரு சிலர் தங்களுக்கு வசதியான தளர்வான உடைகளை அணிந்து வந்திருந்தனர். சேலையிலும் சிலரைக் காணமுடிந்தது.
மேடையில் யோகா நிபுணர்கள் செய்து காட்ட, வந்திருந்த அனைவரும் ஆர்வமுடன் யோகா செய்தனர்.
3 வயது குழந்தையும் யோகா செய்ததைப் பார்த்தபோது, துள்ளிக்குதித்த நம் மனதும் அந்த குழந்தையோடு சேர்ந்து யோகா செய்தது.

பிராங்பேர்ட்டின் இந்திய தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் அவர்களும் மற்றவர்களுடன் இணைந்து யோகா செய்தது அவரின் அர்பணிப்புக்கு ஒரு சான்று. அருகே, ஒருசில ஸ்டால்களில் யோகா சம்பந்தமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 15ம் தேதி கொலோன் நகரத்திலும் இந்திய தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
புகைப்படங்கள்: இந்திய தூதரகம், பிராங்பேர்ட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



