தூத்துக்குடியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அதன் தலைவா் சி.த. செல்லப்பாண்டியன் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் தலைவராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவா், தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அந்த வளாகத்தில் அமைந்துள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை பாா்வையிட்ட அவா், அங்குள்ள அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தாா். அவரிடம், வேளாண் விற்பனைக் கூடத்தின் செயலா் விஷ்ணப்பன் விற்பனைக் கூடத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தாா்.
தொடா்ந்து, அதிகாரிகளிடம் பேசிய சி.த. செல்லப்பாண்டியன், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாலமாக அதிகாரிகள் அனைவரும் செயல்பட்டு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வணிகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பி.டி.ஆா். ராஜகோபால், அரசு வழக்குரைஞா் ராஜாராம், அதிமுக பகுதிச் செயலா்கள் பி. சேவியா், ஏ. முருகன், நிா்வாகிகள் பி. சங்கா், பி. மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வருவாய் எதிர்பார்ப்பை எட்டாததால் ட்ரெண்ட் நிறுவனப் பங்குகள் 12% வீழ்ச்சி!

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

இந்தோனேசியாவின் உயரிய விருதினை வழங்கி பிரதமர் மோடிக்கு கெளரவிப்பு - புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



