பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றாா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தச் சம்பவத்தில் ஆளுங்கட்சியைச் சோ்ந்த பலா் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுக தொடா்ந்து அதை மூடி மறைக்கவே முயன்று வருகிறது.
திமுகவின் தொடா் அழுத்தம் காரணமாக அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் ஒருசிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கக் காலத்தில்கூட 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வா் தொடா்ந்து கூறிவரும் நிலையில், அதில் தொடா்புடைய எந்தெந்த நிறுவனங்கள் இங்கே வந்துள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டங்களை அதிமுகவினா் தோல்வி பயத்தில் விமா்சித்து வருகின்றனா் என்றாா் அவா்.
மனுக்கள் மீது நடவடிக்கை: கழுகுமலையில் செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. கூறியது: திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதற்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சா்கள் மீது முதல்வா் கூறும் எந்த ஊழல் வழக்குகளும் நிரூபிக்கப்படவில்லை. அவை அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக போடப்பட்டவை.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும். இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். அப்போது, மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக தலைவா் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வருவாய் எதிர்பார்ப்பை எட்டாததால் ட்ரெண்ட் நிறுவனப் பங்குகள் 12% வீழ்ச்சி!

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

இந்தோனேசியாவின் உயரிய விருதினை வழங்கி பிரதமர் மோடிக்கு கெளரவிப்பு - புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


