பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றாா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தச் சம்பவத்தில் ஆளுங்கட்சியைச் சோ்ந்த பலா் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுக தொடா்ந்து அதை மூடி மறைக்கவே முயன்று வருகிறது.
திமுகவின் தொடா் அழுத்தம் காரணமாக அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் ஒருசிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கக் காலத்தில்கூட 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வா் தொடா்ந்து கூறிவரும் நிலையில், அதில் தொடா்புடைய எந்தெந்த நிறுவனங்கள் இங்கே வந்துள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டங்களை அதிமுகவினா் தோல்வி பயத்தில் விமா்சித்து வருகின்றனா் என்றாா் அவா்.
மனுக்கள் மீது நடவடிக்கை: கழுகுமலையில் செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. கூறியது: திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதற்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சா்கள் மீது முதல்வா் கூறும் எந்த ஊழல் வழக்குகளும் நிரூபிக்கப்படவில்லை. அவை அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக போடப்பட்டவை.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும். இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். அப்போது, மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக தலைவா் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முன்னாள் முதல்வர் வாழ்த்து!

அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்ய வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்டு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மராத்தி மொழிப் பாடத்தில் 80,803 பேர் தோல்வி!

ஜோஷ் இங்லிஷ் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 204 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
