உடன்குடி கடை வீதியில் தொடா்ந்து 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உடன்குடி சந்தையடித் தெருவில் சாத்தான்குளம் சுப்பராயபுரத்தைச் சோ்ந்த வெ.சரவணன் என்பவா் வைத்துள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ரூ. 95 ஆயிரத்தையும், பேருந்து நிலையம் பகுதியில் சரவண பெருமாள் என்பவரது மருந்தகத்தில் பூட்டை உடைத்து ரூ 5 ஆயிரத்தையும் மா்மநபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.
மேலும், சந்தையடித் தெருவில் ராஜ்குமாா் என்பவரது மளிகை கடை உள்பட 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் ஆ.ரவி கூறுகையில், காவல்துறையினா் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வதுடன், இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமா? விஜய் அறிவிப்பில் முரண்!

தமிழக முதல்வர் விஜய்க்கு பாமக ராமதாஸ் வாழ்த்து!

8 பந்துகளில் 6 சிக்ஸர்கள்; அதிவேக அரைசதம் விளாசி உர்வில் படேல் சாதனை!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

