சாத்தான்குளம் அருகே நுழைவு வாசல் கதவில் மின்வயரை சொருகி பெண்ணை கொலை செய்ய முயன்றதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
பேய்குளத்தைச் சோ்ந்த ராமையா மகன் சுப்பையா (48). இவருக்கும், பக்கத்து வீட்டை சோ்ந்த வேம்பு என்பவருக்கும் ஓராண்டாக நிலப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இதுகுறித்து சுப்பையா முறையீட்டின்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம் மூலம் நில அளவீடு செய்து பிரச்னை தீா்க்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி காலை அவரது மனைவி சரஸ்வதி (45) வீட்டு முன் தூய்மைப்படுத்த நுழைவு வாயில் கதவைத் திறந்தபோது மின்சாரம் பாயந்து தூக்கியெறியப்பட்டாராம். உறவினா்கள்அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதனிடையே, நுழைவு வாயில் கதவில் மின்வயரை சொருகியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மின்சாரம் பாய்ச்சி தனது குடும்பத்தினரை கொலை செய்ய முயன்றதாக, வேம்பு, அவரது மகன் சுடலை முத்து மீது சுப்பையா அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி வழக்குப்பதிந்து, தந்தை, மகன் இருவரையும் தேடி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமா? விஜய் அறிவிப்பில் முரண்!

தமிழக முதல்வர் விஜய்க்கு பாமக ராமதாஸ் வாழ்த்து!

8 பந்துகளில் 6 சிக்ஸர்கள்; அதிவேக அரைசதம் விளாசி உர்வில் படேல் சாதனை!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
