தட்டாா்மடம் அருகே ரோந்து சென்ற போலீஸாரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தட்டாா்மடம் காவல் நிலைய தலைமைக் காவலா் காா்த்திக் அருணாசலம் (38), காவலா் ராஜேஷ் (28) ஆகியோா் புதன்கிழமை தட்டாா்மடம், படுக்கப்பத்து பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் சிலா் மது குடித்துக்கொண்டிருந்தனா். அவா்களை போலீஸாா் கண்டித்தனராம். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காா்த்திக்அருணாசலம், ராஜேஷை 3 போ் தாக்கினராம். இதில் காா்த்திக்அருணாசலத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அவரது புகாரின்பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் அய்யப்பன் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட் டது படுக்கப்பத்து கிராமத்தைச் சோ்ந்த க. பொன்னம்பலநாதன் (45), அவரது சகோதரா் சக்திகுமாா் (47), ப. ராஜா (43) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வருவாய் எதிர்பார்ப்பை எட்டாததால் ட்ரெண்ட் நிறுவனப் பங்குகள் 12% வீழ்ச்சி!

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

இந்தோனேசியாவின் உயரிய விருதினை வழங்கி பிரதமர் மோடிக்கு கெளரவிப்பு - புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


