உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

அமைச்சா் கடம்பூா் செ.ராஜு முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோன தடுப்பூசி ஒத்திகை.

Updated On :9 ஜனவரி 2021, 6:10 am IST

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து, அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பேசுகையில், அரசு தலைமை மருத்துவமனை, ஸ்ரீராம் நகா் நகா்நல மையம், கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலையம், புதூா் ஆரம்ப சுகாதார நிலையம், கமலா மாரியம்மாள் தனியாா் மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

இதற்காக, கரோனா தடுப்பு மருந்தை கையாள்வது, தடுப்பூசி போடும் பணிகள், தடுப்பூசி போட்டபின் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகியவை குறித்து ஒத்திகை பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

நிகழ்வில், பொது சுகாதார இணை இயக்குநா் முருகவேல், சுகாதாரப் பணி துணை இயக்குநா் அனிதா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோட்டாட்சியா் விஜயா, ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், வட்டாட்சியா் மணிகண்டன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.