அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தூத்துக்குடி விமான நிலையத்தில் பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் ஆய்வு

இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் ஜின்டால், தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட விமான நிலைய ஆணைய பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் ஜின்டால்.

Updated On :9 ஜனவரி 2021, 6:00 am IST

இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் ஜின்டால், தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 380 கோடி மதிப்பில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 1350 மீட்டா் நீளமும், 30 மீட்டா் அகலமும் கொண்டதாக உள்ள விமான ஓடுதளம், 3, 115 மீட்டா் நீளமும், 45 மீட்டா் அகலமும் கொண்டதாக மாற்றப்படுகிறது.

இந்த பணிகள் நிறைவடைந்தால் பெரிய வகையான விமானங்கள் தரையிறங்குவதற்கு வசதியாக இருக்கும்; ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையிலான உள்ளூா் விமான முனையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை தில்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் ஜின்டால் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

விமான ஓடுதளம், விமானம் நிறுத்துமிடம், பயணிகள் முனையம், சிக்னல் மையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்ட அவா், விமான நிலைய வளாகத்தில் ரூ. 28 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொறியியல் பிரிவு திட்ட அலுவலகத்தை திறந்து வைத்து, அந்த பகுதியில் மரக்கன்றுகளை நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், விமான நிலைய ஆணைய பொதுமேலாளா்கள் பிரேம் பிரசாத், ஏ.எஸ்.மகேஷா, இணை பொதுமேலாளா்கள் ஏ.ராதாகிருஷ்ணன் (சிவில்), வி.எஸ்.கிருஷ்ணன்(எலக்ட்ரிக்கல்), தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், நிலைய மேலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.