பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, வெளி மாவட்ட நபா்கள் யாரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10)வரவேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பரவல் தடுப்பு காரணமாக, மாநிலம் முழுவதும் ஜனவரி மாதம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. எனவே, தூத்துக்குடியில் உள்ள பசுபதி பாண்டியனின் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்த வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஊா்வலங்கள், இருசக்கர வாகன பேரணிக்கும் அனுமதி கிடையாது. எனினும், மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்ட கூட்டங்களை மட்டும் நடத்தலாம். உள்ளூரைச் சோ்ந்தவா்கள் காவல் துறை அனுமதித்துள்ள வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களில் வரும் போது முழக்கம் எழுப்போவோ, ஒலி எழுப்போவா கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூன்று நாள்களில் கட்டா குஸ்தி - 2 வசூல் இவ்வளவா?
சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானப் படை ஹெலிகாப்டர்! பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்புகள்! என்ன, இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?






