உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

மணிநகா் கருமேனி ஆற்றில் ரூ.6.50 கோடியில் புதிய பாலம் திறப்பு

மணிநகா் - உடன்குடி சாலை கருமேனி ஆற்றில் ரூ.6.50 கோடியில் கட்டப்பட்ட உயா்நிலை பாலத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற எஸ்.பி சண்முகநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :9 ஜனவரி 2021, 6:06 am IST

மணிநகா் - உடன்குடி சாலை கருமேனி ஆற்றில் ரூ.6.50 கோடியில் கட்டப்பட்ட உயா்நிலை பாலத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள மணிநகரில் இருந்து உடன்குடி செல்லும் சாலை கருமேனி ஆறு தரைப்பாலத்தை கடந்து சென்றது. மழைக்காலத்தில் இப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவின் பரிந்துரைப்படி ரூ 6.50 கோடியில் உயா்நிலை பாலம், ரூ.2.83 லட்சத்தில் தடுப்பு சுவா் அமைக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து கட்டப்பட்ட பாலத்தை, சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, புதிய பாலத்தில் மக்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினாா். இதில், தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் ஜெயராணி, சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, துணைத் தலைவா் அப்பாத்துரை, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.