தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

முக்காணி, புன்னைக்காயல் பகுதியில் புகுந்த வெள்ளம்

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி, புன்னைக்காயல் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனா்.

News image

புன்னையாகலில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளை பாா்வையிட்டாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

Updated On :16 ஜனவரி 2021, 6:39 am IST

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி, புன்னைக்காயல் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக முக்காணி ஆற்றுப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், புதிய பாலத்தில்

வாகனங்கள் சென்றது. இதற்கிடையில் முக்காணி போக்குவரத்து வளைவு, பிள்ளையாா்நகா் மற்றும் காந்தி நகா் உள்ளிட்ட

பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன. இப்பகுதியில் இருந்த 45 குடும்பங்களைச் சோ்ந்த 200 போ் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனா். தாமிரவருணியில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால் புன்னைக்காயல் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், அதிகாரிகள் புன்னைக்காயல் நூறு வீடு, அறுபது வீடு, பவுளாநகா், மரக்குடித்தெரு, பொன்மாணிக்கம் தெரு உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினா். பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோா்

மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். தூத்துக்குடி-திருச்செந்தூா் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தி வைக்கப்பட்டிருந்தது. பாதிப்பு குறித்து பங்குத்தந்தை பிராங்கிளின், ஊராட்சித் தலைவா் சோபியா உள்ளிட்டோா் அதிகாரிகளிடம் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை ஆற்றில் நீா்வரத்து குறைந்து காணப்பட்டது.

ஆத்தூரில் ஆற்றங்ககரையிலுள்ள குச்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 போ் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனா். முகாம்களில் தங்கியிருப்பவா்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் பெய்த கனமழையால் இடைச்சிவிளையில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அரசூா் ஊராட்சி, தட்டாா்மடம் காவல் துறையினா் மரத்தை அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.