ராமநவமியை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை காமாட்சி அம்மை சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் பிரதோஷ பேரவை சார்பில் சீதா ராம திருக்கல்யாண மஹோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து மணமகன் வீட்டார் சார்பில் இரா.குமரகுரு எம்.எல்.ஏ, நாராயணசாமி யாதவ், மணமகள் வீட்டார் சார்பில் வக்கீல்கள் முத்துலிங்கம், பொன்.ராவணன் உள்பட பலர் சீர்வரிசை எடுத்துச் சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராமசந்திர சுவாமிக்கும், சீதாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தேரோடும் வீதிகளின் வழியே சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







