முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மரக்காணம் கலவரத்தில் இளைஞர் கொலை: பிரேதப் பரிசோதனையில் உறுதி

மரக்காணம் கலவரத்தின்போது, விபத்தில் இறந்தவர்களாக கூறப்பட்ட இரு இளைஞர்களில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை

Updated On :2 மே 2013, 12:51 pm IST

மரக்காணம் கலவரத்தின்போது, விபத்தில் இறந்தவர்களாக கூறப்பட்ட இரு இளைஞர்களில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து விபத்து வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் சித்திரை பெருவிழாவிற்கு வாகனத்தில் சென்ற அரியலூர் செல்வராஜ், தஞ்சாவூர் விவேக் ஆகிய இருவரும், மரக்காணத்தில் நடைபெற்ற சாலை மறியலின்போது வாகனத்தை விட்டு கீழே இறங்கி நின்றனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது இருவரும் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர். அவர்கள், விபத்தில் இறந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸýம், அவரது கட்சியினரும் கூறி வந்தனர்.

இந்நிலையில், அவர்களில் செல்வராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேதபரிசோதனை மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர், வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.