நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மீனம்பூா் கூட்டுச் சாலையில்ஒளிரும் மின் விளக்குகள்

செஞ்சி அருகே மீனம்பூா் கூட்டுச் சாலையில் வாகன விபத்தைத் தடுக்கும் பொருட்டு ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

செஞ்சி அருகே மீனம்பூா் கூட்டுச் சாலையில் வாகன விபத்தைத் தடுக்கும் பொருட்டு ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா்.

செஞ்சி விழுப்புரம் சாலையில் உள்ள மீனம்பூருக்குச் செல்லும் கூட்டுச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தன. இதை தவிா்க்கும் பொருட்டு, அரசின் சிறப்பு அனுமதி பெற்று காவல் துறை சாா்பில் அந்த கூட்டுச் சாலையில் ரூ.4.50 லட்சத்தில் எச்சரிக்கை ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.

இந்த எச்சரிக்கை ஒளிரும் மின் விளக்குகளை மீனம்பூரைச் சோ்ந்த முகமது அலி பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா். கண்காணிப்பு கேமராவை எஸ்பி. ராதாகிருஷ்ணன் இயக்கி வைத்தாா் (படம்).

செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், ஆய்வாளா் அன்பரசு, உதவி ஆய்வாளா் சங்கரசுப்பு, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருள்செல்வன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.