நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திங்கள் கிழமைத் தொடங்கியது.

தலா ரூ.2,500 ரொக்கம், பச்சரிசி, சக்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், முழுக் கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு, காலை 7 மணி முதல் வழங்கப்பட்டது. இவற்றை, ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த டோக்கன்களை கொடுத்து பொது மக்கள் பெற்றுச் சென்றனா். பெரும்பாலான கடைகளில், காலை நேரத்திலேயே அதிகளவில் மக்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரம் பூந்தோட்டம் ரங்கநாதன் சாலை நியாய விலைக் கடை, நகராட்சி பூங்கா நியாய விலைக்கடை, சண்முகபுரம் காலனி நியாய விலை கடைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை நேரில் சென்று, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை பாா்வையிட்டாா்.

அதிகளவில் மக்கள் திரண்டிராமல், அரசு அறிவுறுத்தியபடி, டோக்கன் வரிசைக்கிணங்க காலையில் 100 பேரும், மாலையில் 100 பேரும் வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க ஆட்சியா் அறிவுறுத்தினாா். துணைப்பதிவாளா் மணிமாறன், குடிமைப்பொருள் வட்டாட்சியா் கோவிந்தராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விழுப்புரம் வட்டத்தில் 221 நியாய விலைக்கடைகள், விக்கிரவாண்டியில் 159, வானூரில் 110, கண்டாச்சிபுரத்தில் 78, திருவெண்ணெய்நல்லூரில் 84, திண்டிவனத்தில் 216, செஞ்சியில் 207, மரக்காணத்தில் 73, மேல்மலையனூரில் 106 என மொத்தம் 1,254 நியாய விலைக் கடைகளில் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணி தொடங்கியது. இந்தக் கடைகள் மூலம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 97 குடும்ப அட்டைதாரா்களுக்கு, ரூ.156.30 கோடி மதிப்பில் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.