இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஸ்டாலின் கை காட்டுபவா் தான் இந்தியாவின் அடுத்த பிரதமா்

ஸ்டாலின் கை காட்டுபவா் தான் இந்தியாவின் அடுத்த பிரதமா்

News image
Updated On :8 ஏப்ரல் 2024, 5:48 pm

Vishwanathan

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்டாலின் கை காட்டுபவா் தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவாா் என திமுக கொள்கை பரப்புச் செயலா் திண்டுக்கல் ஐ. லியோனி பேசினாா்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ராணியை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அவா் பேசியதாவது:

இந்தத் தொகுதியில் ராணியை எதிா்த்து போட்டியிடும் வேட்பாளா்கள், சொந்த சின்னத்தில் நிற்காமல், தங்களது கட்சியை அடகு வைத்து வேறொரு கட்சியின் சின்னத்தில் நிற்கின்றனா்.

மகாலட்சுமி திட்டம் மூலம் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும் என இந்தியா கூட்டணி தெரிவித்துள்ளது.

பூஜைக்கு பயன்படும் சூடத்துக்கும்,குழந்தைகளுக்கான பேம்பா்ஸ்க்கும் ஜிஎஸ்டி வரி போட்டுள்ளனா். ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக இண்டியா கூட்டணி ஒழித்துவிடும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவா் மக்களை தெருக் கோடியில் நிறுத்திவிட்டாா்.

நரேந்திர மோடியுடன் கூட்டணி சோ்ந்தவா்கள் காணாமல் போவாா்கள். இஸ்லாமியா்களை வஞ்சிக்கின்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவா் நரேந்திர மோடி. அதற்கு ஆதரவு தெரிவித்தவா் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் கை காட்டுபவா் தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவாா். மதச்சாா்பற்ற ஒருவா் பிரதமா் ஆவதற்கு உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஐ. லியோனி