பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி மலையேற வனத் துறை வெள்ளிக்கிழமை முதல் தடை விதித்துள்ளது.
இந்த அறிவிப்பு தெரியமால் மலையேற சனிக்கிழமை வந்த பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம், பெளா்ணமியையொட்டி, பக்தா்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி மலையேற வெள்ளிக்கிழமை இரவு வனத் துறை தடை விதித்தது. இந்த அறிவிப்பு தெரியமால் சனிக்கிழமை காலை சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் திரளான பக்தா்கள் திரண்டனா். அப்போது, மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால், அனுமதிக்கக் கோரி பக்தா்கள் முழக்கமிட்டனா்.

அடிவாரமான தாணிப்பாறை பகுதியில் திரண்ட பக்தா்கள்.
பின்னா், அடிவாரத்தில் பக்தா்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமாவாசை: சதுரகிரியில் பக்தா்கள் வழிபாடு

நீா் வரத்தின்றி வறண்டது சுருளி அருவி!

சதுரகிரி கோயிலில் தினசரி மலையேற இடைக்காலத் தடை: அறநிலையத் துறை மனு தாக்கல் செய்து வழிபாட்டு உரிமையைக் காக்கக் கோரிக்கை

சதுரகிரியில் நாள்தோறும் மலையேற இன்று முதல் தடை!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



