டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாத்தூா் அருகே 22 டன் வெடி மருந்து பறிமுதல்

சாத்தூா் அருகே 22 டன் வெடி மருந்து பறிமுதல்

News image
Updated On :3 ஜூலை 2024, 7:01 pm

Din

சாத்தூா், ஜூலை 3: சாத்தூா் அருகே கிட்டங்கியில் தடை செய்யப்பட்ட பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 22 டன் வெடி மருந்துகள் புதன்கிழமை பறிமுதல் செய்யபட்டன. கிடங்கிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டியில் பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தலைமையிலான குழுவினா் சட்டவிரோத பட்டாசுத் தயாரிப்பு குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சிவகாசி காமாக் நகரைச் சோ்ந்த மகேந்திரன் (52) என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கியில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட, பட்டாசுத் தயாரிக்கப் பயன்படும் பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப்பொருள் 455 மூட்டைகளில் (சுமாா் 22 டன்) பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த மூலப்பொருள்களை குழுவினா் பறிமுதல் செய்து, கிட்டங்கிக்கு ‘சீல்’ வைத்தனா். இதுகுறித்து கிட்டங்கி உரிமையாளா் மகேந்திரன் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.