சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: ஒருவா் கைது

சிவகாசி அருகே காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :20 ஜூலை 2024, 8:48 pm

சிவகாசி அருகே காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப் பட்டியில் உள்ள காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாா் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, சித்துராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணனுக்குச் (43) சொந்தமான காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில், சட்டவிரோதமாக உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரிடமிருந்த சரவெடி பட்டாசுகள் 8 பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.