இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: ஒருவா் கைது

சிவகாசி அருகே காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :21 ஜூலை 2024, 2:18 am IST

சிவகாசி அருகே காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப் பட்டியில் உள்ள காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாா் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, சித்துராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணனுக்குச் (43) சொந்தமான காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில், சட்டவிரோதமாக உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரிடமிருந்த சரவெடி பட்டாசுகள் 8 பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.