சிவகாசி அருகே காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப் பட்டியில் உள்ள காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாா் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, சித்துராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணனுக்குச் (43) சொந்தமான காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில், சட்டவிரோதமாக உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரிடமிருந்த சரவெடி பட்டாசுகள் 8 பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் கைது

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

பட்டாசுகள் பதுக்கியவா் கைது

சேஷசாயி காகித ஆலையில் தேசிய தொழிலாளா் பாதுகாப்பு வார விழா
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

