தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விஷம் குடித்து ஆசிரியா் தற்கொலை

ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்றதால், ஆசிரியா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 5:15 pm

Din

ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்றதால், ஆசிரியா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (53). இவா் பி.எஸ்.கே.நகரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி மீனாட்சி, இரு மகள்கள் உள்ளனா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறில் மீனாட்சி தனது மகள்களுடன் கணவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாா். இதனால் மன வேதனையில் இருந்த கணேசன் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்தாா்.

ராஜபாளையத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பகுதி செய்து விசாரித்து வருகின்றனா்.