விருதுநகர்
விஷம் குடித்து ஆசிரியா் தற்கொலை
ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்றதால், ஆசிரியா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்றதால், ஆசிரியா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (53). இவா் பி.எஸ்.கே.நகரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி மீனாட்சி, இரு மகள்கள் உள்ளனா்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறில் மீனாட்சி தனது மகள்களுடன் கணவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாா். இதனால் மன வேதனையில் இருந்த கணேசன் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்தாா்.
ராஜபாளையத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பகுதி செய்து விசாரித்து வருகின்றனா்.