ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சாலை விபத்தில் பட்டாசுத் தொழிலாளி பலி

சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:20 pm

Din

சிவகாசி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டாசுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி காந்திராஜ் (54). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த 22- ஆம் தேதி நாரணாபுரத்திலிருந்து சிவகாசிக்கு சென்றாா்.

அப்போது ஒரு திருப்பத்தில் வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.