

சிவகாசி, மே 5: சிவகாசியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை செய்யப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் சுரேஷ் (36). இவா் தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், சிவகாசி-சாத்தூா் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு கட்டடம் அருகே சடலமாகக் கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி கிழக்கு போலீஸாா் அவரது சடலத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில், இறந்து கிடந்தது சுரேஷ் என்பது தெரியவந்தது.
மேலும், போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சுரேஷ், 56 வீட்டுக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், சுப்பிரமணியபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா், முனீஸ்வரன்குடியிருப்பைச் சோ்ந்த காா்த்தீஸ்வரன், பழனி ஆகிய 5 பேரும் சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மதுப் புட்டியால் சுரேஷை குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இதையடுத்து, தப்பியோடிய நான்கு பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சிவகாசி! பட்டாசு தொழில் பூங்கா அமைக்க வேண்டும்!

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

தனியாா் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல் 24 மாணவா்கள், ஓட்டுநா் காயம்

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

